மேற்கண்ட
தலைப்பில் 1998ம்
ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி
யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர்
அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே
காட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. அதன்
விபரங்கள்:
1947 - ம் ஆண்டு ஒருநாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன்
காணாமல் போன தனது ஆட்டுக்குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை (Dead Sea) ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப்பகுதிகளில்
தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.
ஆட்டுக்குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த பொழுது மண்
சாடிகளில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட
தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம்
கொடுக்க மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்து சுருள்களையும் வீட்டுக்குக்
கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களை தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச்
சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு
மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல் அதை அப்போது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு
ஜெருசலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஒரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச்
செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்
என்று கருதி ஒரு சில தீனார்களுக்கு அத்தனைச் சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து
விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை
அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து
விட்டார்.
இந்தச் சந்தர்பத்தில் சுருள்கள்
கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும்
ஆர்வம் காட்டினர். அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன் அந்தச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்துவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு
அவைகள் ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல
அறிஞர்களுக்கும் கூட அவைகளைப் படிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை. இடைப்பட்ட ஐந்தாண்டு
காலங்களில் ஜெருசலத்தில் இருந்த
பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப்பகுதிகளில் இருந்த பொதுங்குளில் தேடியலைந்து அங்கிருந்த
சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர். 1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
அனைத்து சருள்களும் கிறித்தவப்
பாதிரிமார்கள் கையில் போய் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் (Manuscripts) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது
கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை ஒரு
குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள்
அடங்கிய குழு இருட்டடிப்புச் செய்து விட்டது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு
ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில்
அக்குழுவில் உள்ள மற்றவர்களால்
வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தது.
இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின்
வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்கால
சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm எடுத்தார்கள். அதன் ஒரு செட் போட்டோ
காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு ரகசிய பாதுகாப்புக்காக
அனுப்பி வைக்கப்பட்டது.
1990 ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற
அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம்
காட்டி அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர். இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து
சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களை
பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவைகளைப் படித்தார். அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக
வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை
மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம்
என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ
பல்கலைக்கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று
அவர் கருதிய 100 Manuscripts
- களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ
உலகத்தை உலுக்கியது என்றும் குறிப்பாக கிறித்துவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து
போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர்
கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையை தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது
என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும்
சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர்
குறிப்பிடுகின்றார். அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும்
இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும்
அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக்
கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.
- கண்டுபிடிக்கப்பட்ட
வேதாகமப்பகுதிகள்:
புத்தங்கள் பிரதிகள்
சங்கீதங்கள் 39
ஆதியாகமம் 24
ஏசாயா 22
யாத்திராகமம் 18
லேவியராகமம் 17
எண்ணாகமம் 11
சிறிய தீர்க்கதரிசிகள் 10
தானியல் 8
எரேமியா 6
எசேக்கியல் 6
யோபு 6
1, 2 சாமுவேல் 4
உபாகமம் 33
இவைகளுடன் ஏனோக், யூப்லி ஆகிய வேதாகமத்தை சார்ந்த புத்தகங்களும்
கண்டுபிடிக்கப்பட்டது. யூப்லி புத்தகம் எத்தியோப்பிய வேதாகமத்தில் காணப்படுகின்றது.
கும்ரான்
குகைளில் கண்டுபிடிக்கப்பட்ட வேதப்பகுதிகள் எல்லாம் பழையேற்பாட்டு பகுதிகளே.
புதியேற்பாட்டின் எந்தப்பகுதியும் கண்டு பிடிக்கப்படவில்லை.
கும்ரான்
குகைளில் கண்டுபிடிக்கப்பட்டது போலவே பல இடங்களில் இருந்தும் பல நாடுகளின்
அருங்காட்சியகங்களில் இருந்தும் பல ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பற்றி
விவரமாக தெரிந்து கொள்ள விரும்பினால் விக்கிபீடியாவில் Geniza Fragments, Ben Asher Manuscripts, Aleppo Codex, Codex Leningradensis இந்த தலைப்புகளின் கீழ் உள்ள பக்கங்களை பார்க்கவும். இவைகள்
எல்லாம் பழங்கால வேதாகமங்களின் ஏடுகள் தானே தவிர மூல ஏடுகள் கிடையாது. சரி நாம்
வேதாகமம் உருவான கதையை தொடர்வோம்.
வேதாகமம் உருவான கதை - பாகம் 4 யை காணவும்
nice...
ReplyDelete